×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது

 

அம்பத்தூர்: அண்ணாநகரை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் எனது வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறேன். நான் வேலைக்கு செல்லும்போது என்னுடன் 17 வயது மகளையும் உடன் அழைத்துச் செல்வேன். அப்போது, அந்த வீட்டில் கார் டிரைவராக வேலை செய்யும் அரி (41) என்பவர், எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறி இருந்தார்.

விசாரணையில், கார் டிரைவர் அரி, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரி மீது போக்சோ வழக்கு பதிந்த நிலையில் அவர் தலைமறைவானார். அண்ணாநகரில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Ampathur ,Annanagar ,Annanagar All Women ,Police Station ,
× RELATED சென்னையில் அனைத்து பேருந்து...